×

கொட்டாரக்குடி, பெருங்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணி

திருவாரூர், நவ. 6: திருவாரூர் அருகே கொட்டாரக்குடி மற்றும் பெருங்குடி ஊராட்சி பகுதிகளில் சம்பா நெற்பயிர்களை கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கொட்டாரக்குடி ஊராட்சி கல்யாண மகாதேவி கிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பா சாகுபடிகளை கலெக்டர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் சாகுபடி பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கான கடன் பதிவேடு, நகை கடன் பதிவேடு ,உரம் விற்பனை மற்றும் இருப்பு பதிவேடு போன்றவற்றினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள உரங்கள் மற்றும் கடன் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள உரக் கிடங்கினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பெருங்குடி ஊராட்சிக்குட்பட்ட அணக்குடி கிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பா சாகுபடி பணிகளையும் கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா , கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : area ,Perungudi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...