×

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சை, நவ. 6: தஞ்சை நகரம் வடக்கு வாசல் பாலோபநந்தவனம் ருக்மணிம்மாள் மடத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஹரிஹரன் (20). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின்படி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து ஹரிஹரனை புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளியில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...