×

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேமோகிராம் கருவி துவக்கம்

புதுக்கோட்டை, நவ.6: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் மற்றும் ஆர்கான் கிரீன் லேசர் பயன்பாட்டினை சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொதுமக்களுக்கு பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.18.79 லட்சம் மதிப்பீட்டில் மேமோகிராம் என்கின்ற மார்பக புற்றுநோயினை பரிசோதிக்கக் கூடிய சிறப்பு கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Tags : Commencement ,Pudukkottai ,Government Hospital ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...