×

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

பாடாலூர், நவ 6: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சரவணன் (42). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக வேலை கிடைக்காத விரக்தியில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விவசாய பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி மருவத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது