×

மின்சாரம் தாக்கி மாணவர் காயம்

பாடாலூர், நவ. 6: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் கிருபாகரன் (16) என்பவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருபாகரனை மீட்டு செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...