×

கொள்ளிடம் அருகே மின்விசிறி பொருத்தியபோது தவறி விழுந்த முதியவர் பலி

கொள்ளிடம், நவ.6: கொள்ளிடம் அருகே மின்விசிறி பொருத்திக்கொண்டிருந்த போது தவறி விழுந்து ஏலக்டிரிஷியன் இறந்தார்.கை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (54). தனியாக வீடுகளுக்கு சென்று எலக்டிரிஷியன் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை குத்தவக்கரையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குள் ஒரு கோக்காலி மீது ஏறி நின்றுக்கொண்டு மேற்கூரையின் உள்பகுதியில் மின்விசிறியை பொருத்திக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரெனச் தவறி கீழே விழுந்த பாஸ்கரனின் தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்து கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாஸ்கரனுக்கு பவானி(46) என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

Tags : kottu ,
× RELATED கொள்ளிடம் அருகே மயானத்துக்கு சாலை...