×

சீர்காழி பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மரக்கன்றுகள் நடும் பணி

சீர்காழி, நவ.6: சீர்காழி கொள்ளிடம் வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் சீர்காழி கோட்ட நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சூரியமூர்த்தி உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் சாலைப் பணியாளர்கள மக்கள் கூடும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது மரக்கன்றுகள் அமைக்கப்பட்டு கூண்டுகள் அமைக்கப்படுகின்றன. இந்த கூண்டுகளை சற்று உயரமாக அமைத்தால் மரக்கன்றுகளை ஆடுமாடுகள் சாப்பிட முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பல நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர் மரக்கன்றுகள் நட்டு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேசமயம் நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Highway Department ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்