×

மனு கொடுக்க வந்தவர்களை கைது செய்ய கூறுவதா? கரூர் கலெக்டருக்கு மா. கம்யூ. கண்டனம்

கரூர், நவ. 6: மனு கொடுக்க வந்தவர்களை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கந்தசாமி விடுத்துள்ள அறிக்கை:கரூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் குறைதீர் நாள் முகாமில், மாட்டு வண்டியில் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அனுமதி வேண்டி மனு அளிக்க சென்ற மாட்டுவண்டி தொழிற்சங்கத்தினரை அவமரியாதையாக நடத்தியதோடு, மேலும் அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறையினரை வைதது 4 தொழிலாளர்களையும் குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி சென்று மாலையில் விடுவித்துள்ளனர். ஆட்சியரின் இச்செயல் பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செம்பியநத்தம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூடப்படாமல் இருப்பதை கலெக்டரிடம் அலைபேசியில் பேசிய உரையாடலும் அதில் ஆட்சியர் பதில் அளித்த விதமும், சாதாரண குடிமகன் ஆட்சியாளரிடம் எந்த புகாரும் தெரிவிக்கக்கூடாது என்ற தொனியில் உள்ளது. இதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் அராஜக போக்கை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும். தமிழக அரசு இதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Karur Collector ,Ma ,Communist ,
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...