×

கரூர் சீத்தப்பட்டி பகுதியில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் அவதி

கரூர், நவ. 6: கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி பகுதிக்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி பகுதியில் குடிநீர் சப்ளை வழங்குவதற்காக சாலையோரம் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்த சாலை குறுகிய சாலையாக உள்ள நிலையில் பள்ளம் தோண்டி அதன் மண் சாலையில் கொட்டப்பட்டு வருவதால் பிற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை இந்த பகுதியில் நிலவி வருகிறது. எனவே, பள்ளம் தோண்டும் பணியை விரைந்து முடித்து, குழாய்களை பதித்து, எளிதான போக்குவரத்து நடைபெற தேவையான அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : area ,Karur Siddhapatti ,
× RELATED வாட்டி வதைக்கும்...