குன்னூர், நவ.6: குன்னூரில் அரசு தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டின் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் உள்ளன.
இந்த பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பெய்து வந்த கன மழைகாரணமாக பூங்காவில் உள்ள மலர்கள் அழுகி வீணாகியது. இரண்டாவது சீசனுக்காக தயார் நிலையில் இருந்த மலர் செடிகள் தண்ணீரில் வீணாகியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா பருவ நிலை மாற்றம் காரணமாக பசுமைக்கு திரும்பியுள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி திருமண தம்பதிகளை கொண்டு எடுக்கப்படும் அவுட்டோர் சூட்டிங் மற்றும் போட்டோகிராபிக்காக அதிகளவில் பொதுமக்கள் குன்னூர் காட்டேரி பூங்காவை தேடி வருகின்றனர். மீண்டும் பூங்கா பசுமைக்கு திரும்பிவருவது சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா ஊழியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.