×

ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து இளம்பெண்ணிடம் ₹20 ஆயிரம் அபேஸ்

தண்டராம்பட்டு, நவ.6:  தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி(32). இவர் நேற்று முன்தினம் வாணாபுரம் கிராமத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அங்கு நின்றிருந்த வாலிபரிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி மெஷினில் செலுத்திய வாலிபர், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லை எனக்கூறி கார்டை திருப்பி கொடுத்து அனுப்பிவிட்டார்.

இந்நிலையில், சிறிது நேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து ₹20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சுகந்தியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து வங்கி மேலாளரிடம் புகார் செய்தார். அதற்கு ேமலாளர், போலீசாரிடம் புகார் செய்யுமாறு கூறி அனுப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார், வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ATM ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...