×

சோளிங்கர் நாரைக்குள மேடு அருகே உடைந்த சிறு பாலத்தை சீரமைக்க கோரிக்கை

சோளிங்கர், நவ.6: சோளிங்கர் பேரூராட்சி கிழக்கு போஸ்ட் ஆபிஸ் தெருவில் நாரைக்குளமேடு அருகே கழிவுநீர் கால்வாய் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பலர் உடைந்த பாலத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவை அவ்வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவசர காலங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக புதிதாக சிறு பாலத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,platform ,Sholingar Narakkulai ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...