×

போலீஸ்காரர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

செங்கல்பட்டு, நவ.6: மறைமலைநகரில் மது அருந்தியதை தட்டி கேட்ட 2 போலீஸ்காரர்களை, தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மறைமலைநகர் போலீசார் எஸ்.அருண்குமார், பி.அருண்குமார் ஆகியோர் மறைமலைநகர்,  காட்டாங்கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரிக்கரை பகுதியில் 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களை தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வாலிபர்கள், 2 போலீசாரையும் சரமாரியாக தாக்கியதில், 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும்  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், 3 வாலிபர்களும் தப்பியோடினர். அவர்களை விரட்டி சென்று, 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று  விசாரித்தனர்.

அதில், மறைமலைநகர் ரயில் நகரை சேர்ந்த பிரவீன் (24), அஜீத் (23) என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிை9றயில் அடைத்தனர். இதற்கிடையில், காயமடைந்த 2 போலீசாரும்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணன், வந்தவாசியில் உள்ள  உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இரவு அனைவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள  பிரோவை உடைத்து, அதில் இருந்த 5 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* பல்லாவரம்: மாங்காடு அடுத்த சிக்கராயர்புரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (38). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதையடுத்து அரவிந்த், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க மாமியார்  வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதி திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 9 சவரன் நகை, ₹10 ஆயிரத்தை  மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.தாம்பரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், நாயுடு ஷாப் சாலை யில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிராகரன்ஸ் (29). தனியார் நிறுவன ஊழியர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிராகரன்ஸ், தனது லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது. இரவு திடீரென மின்னழுத்தம் அதிகரித்ததால், லேப்டாப் வெடித்து சிதறியது. இதில்  வீட்டின் படுக்கை அறையில் தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த ஏசி, மின்விசிறி மற்றும் படுக்கை ஆகியவை எரிந்து நாசமாகின. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் அரை மணிநேரம்  போராடி தீயை அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. புகாரின்படி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : policemen ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...