×

வாலிபர் கொலை வழக்கு; குண்டாசில் 3 பேர் கைது

திருத்தணி, நவ. 6: திருத்தணி- அரக்கோணம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இதன் அருகே உள்ள ஓட்டலில் புகுந்து கடந்த 16.8.2019 அன்று மகேஷ் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.  இந்த வழக்கில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.    போலீசாரின் தீவிர விசாரணையில் இவர்கள் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பரிந்துரையின்பேரில்  விமல்ராஜ், கோபிராஜ் மற்றும் அஜித்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட  கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

Tags : Plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...