×

சிறுமிக்கு தொல்லை; பரதநாட்டிய ஆசிரியர் கைது: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

ஆவடி: ஆவடி அடுத்த கோயில்பதாகை, கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம் (53). இவர், கடந்த 6 ஆண்டாக வீட்டில் பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.  இவரது பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். இவர், ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த மாதம் 29ம் தேதி இச்சிறுமி பரதநாட்டியம் கற்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஆசிரியர் ரவிசர்மா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.    இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிறுமியின் பெற்றோர் உள்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு இருந்த ஆசிரியர் ரவிசர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடியில் இருந்து ரவிசர்மாவை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர்  அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நேற்று காலை புகார் செய்தனர்.     அவரது உத்தரவின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் ரவிசர்மாவிடம் விசாரித்தபோது அவர் சிறுமிக்கு தொல்லை தந்தது தெரிந்தது. எனவே போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவிசர்மாவை நேற்று மாலை போலீசார்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : teacher ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...