×

திருட்டு, கொள்ளை சம்பவங்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், நவ. 5:திருவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெறும் திருட்டு கொள்ளை சம்பவங்களை கண்டித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்      தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நகர் குழுவைச் சேர்ந்த காளியப்பன், துணைச் செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ., ராமசாமி, முன்னாள் எம்பி., லிங்கம் மற்றும் பகவத்சிங் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் தலைமையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : Indian ,protests ,thefts ,Communist ,robberies ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...