×

திருச்சுழியிலிருந்து-அருப்புக்கோட்டை செல்லும் சாலையோர வரத்து ஓடையை சீரமைக்க கோரிக்கை

திருச்சுழி, நவ. 5:திருச்சுழியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையோரமாக உள்ள வரத்து ஓடை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி சுமார் 15 கி.மீ., தூரம் உள்ளது.  இந்த நெடுஞ்சாலையில் இருபுறமும் மழைநீர் செல்லும் வகையில் பத்து  வருடங்களுக்கு முன்பு இருந்தது. தற்போது சாலையை அகலப்படுத்தும்போது ஓடை  சுருங்கியதோடு மணல் மேவி ஓடை இருந்த இடம் தெரியாமல் போனது. அதுபோக  இருபுறங்களும் ஓடைகளை ஆக்கிரமித்துள்ளதால் முற்றிலும் மழைநீர் செல்ல  முடியாமல் போனது. இதனால் குலசேகரநல்லூர், மேலகண்டமங்கலம், சித்தலக்குண்டு,  தமிழ்பாடி ஆகிய கண்மாய்களுக்கு செல்லக்கூடிய மழைநீர் தடுக்கப்பட்டதால் கடந்த பத்து  வருடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர் வந்து சேருவதில்லை. மேலும் திருச்சுழி பெரிய கண்மாயை சுமார் 90 லட்சம் செலவில்  குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. தற்போது பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு  பெய்யாததால் கண்மாய்க்கு ஓரளவிற்கு மட்டும் தண்ணீர் வந்துள்ளது. இதனால்  விவசாயிகள் கண்மாய் நீரை நம்பி பயிர் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். குடிமராமத்து திட்டத்தின்கீழ் அருப்புக்கோட்டையிலிருந்து  திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து ஓடைகளை  சீரமைத்தால் அனைத்து கண்மாய்களுக்கும் நீர் வருவதற்கான சாத்தியக்கூறுகள்  உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Aruppukkottai ,Trichy ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...