×

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் புகார் மனு

சிவகாசி, நவ. 5: சாலை வசதி கேட்டு சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நாரணாபுரம் ஊராட்சியில் உள்ள போஸ் காலனி மக்கள் புகார் மனு கொடுத்தனர்.சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நாரணாபுரம் ஊராட்சியில் உள்ள போஸ் காலனி  பொதுமக்கள் சார்பாக நேற்று மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் உள்ள போஸ் காலனி அய்யா கோயில் தெருவில் 150 குடும்பங்கள் வசிக்கின்றோம். போஸ்காலனி சாலையில் இருந்து அய்யா கோயில் தெருவரை 30 மீட்டர் துாரத்திற்கு மட்டுமே ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 200 மீட்டர் துாரத்திற்கு ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து கூட செல்ல முடியவில்லை. பள்ளி மாணவர்கள், பெண்கள், வயதானவர்களுக்கு சிரமம் அடைகின்றனர். இப்பகுதியில் வாறுகால் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : road facilities ,
× RELATED மழைநீர் வடிகால், சாலை வசதிகளை...