×

கழிவுநீர் தேக்கத்தால் தொற்று நோய் அபாயம்

கடத்தூர், நவ.5: கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்டுரோட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேற முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி, கூட்ரோடு பகுதியில் கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது.இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் இரவு ேநரங்களில் தூங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தவும், தேங்கிய நிலையில் இருக்கும் கழிவுநீரை அகற்றவும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா