×

பிரதம மந்திரியின் ஆதரவு நிதி திட்டத்தில் சேர அழைப்பு

ஆட்டையாம்பட்டி, நவ.5:  வீரபாண்டி வட்டாரத்தில் பிரதம மந்திரியின் ஆதரவு நிதி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாய ஆதரவு நிதி திட்டத்தில் சேர்ந்து உதவி பெற பதிவு செய்யும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 6ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது குறித்து வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமரின் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கி கணக்கில் 3 தவணைகளாக ₹ 2000 வீதம் மொத்தம் 6000 வழங்கப்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2வது தவணைகள் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், 3வது தவணைகான நிதி பெறுவார்கள் தங்களது ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு நகலை வீரபாண்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கியும், ஆதார் அட்டையில் கண்டுள்ள படி பெயர்களை திருத்தம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இதுவரை இந்தத் திட்டத்தில் சேராத விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகல், குடும்ப அட்டை நகல், மற்றும் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை இணையத்திலோ அல்லது கணினி மையத்தில் நாளைக்குள் பதிவு செய்து வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு