திருச்சி, நவ.5: பொதுப்பாதையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி திருச்சியில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் கலெக்டரிடம் சிறுமி மனு கொடுத்தார்.திருச்சி கருமண்டபம் சோழகர்நகரைச்சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் சத்யப்ரியா(5). இவரது வீட்டிற்கு முன்பு உள்ள பொதுப்பாதையில் கழிவுநீர் தேங்குவதாகவும், குப்பைகள் கிடப்பதாகவும், அதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதாகவும், கழிவுநீர், குப்பைகளை அப்புறப்படுத்திட வேண்டுமென நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். கலெக்டரிடம் சிறுமி மனு கொடுத்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.