×

வாரணவாசியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை அரியலூர் கலெக்டர் ஆய்வு

அரியலூர்,நவ.5: அரியலூர் அருகே ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் மழைக்காலங்களில் குடிநீர் காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமலும், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிக்க அனுப்பாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், வாரணவாசியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடுவீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறத. ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவ கேந்திரா போன்ற அமைப்புகள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலருடன் தொடர்பு கொண்டு சேவை செய்திட கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Ariyalur Collector ,Varanasi ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை