×

பாலமுருகன்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

ஜெயங்கொண்டம், நவ.5: ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் உள்ள பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பாலமுருகன் , வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் உடையார்பாளையம் பேரூராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Thirukkalayana Festival ,Palamurukan Kovil ,
× RELATED தென்காசி, களக்காடு கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்