×

பைக் விபத்தில் இளம்பெண் பலி

சுரண்டை, நவ. 5:  மேலப்பாவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (32) கூலித் தொழிலாளி. இவரும், இவரது மனைவி சித்திரகலா (29), மகன் இசக்கிமுத்து (5) ஆகிய 3 பேரும் நேற்று காலை சுந்தரபாண்டியாபுரத்தில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பைக்கில் சென்றனர். அங்கு இசக்கிமுத்துவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே முருகையா (45) என்பவர் ஓட்டிவந்த பைக், பேச்சிமுத்துவின் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 4 பேரும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மீட்கப்பட்ட 4பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சித்திரகலா உயிரிழந்தார்.



Tags : Teenager ,bike accident ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை