×

உடல்நலக்குறைவால் இறந்த ஆசிரியரின் கண்கள் தானம்

களக்காடு, நவ.5: களக்காடு பெரிய தெருவைச் சேர்ந்தவர் நெல்லைநாயகம் (91). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு வேலம்மாள் என்ற மனைவியும் பொன்னுசுவாமி, பிரம்மநாயகம், பாண்டியராஜன் என்ற மகன்களும், ராமலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லைநாயகம், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து அவரது உடல் களக்காடு கொண்டு செல்லப்பட்டநிலையில், அவரது கண்களை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நெல்லைநாயகத்தின் உடலில் இருந்து கண்களை பாதுகாப்புடன் அகற்றி நெல்லை கொண்டுசென்றனர்.  பார்வை இழந்த இருவருக்கு பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.





Tags : teacher ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...