×

வங்கி காவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், நவ. 5: வங்கிக் காவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் செக்யூரிட்டி கார்டு கம் பியூன் பணியிடத்திற்கு ஆட்தேர்வு செய்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தவேலைவாய்ப்பு முன்னாள் படை வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திட கடைசி நாள் வரும் 8ம் தேதி.

இந்த அரிய வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அவ்விபரத்தினை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவித்திடுமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Veterans ,Bank Guard Bureau ,
× RELATED 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய...