×

கரூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல் இன்ஜினியர் பரிதாப பலி

கரூர், நவ. 5: கரூர் திருச்சி பைபாஸ் சாலை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இன்ஜினியர் காயமடைந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூரைச் சேர்ந்தவர் வினோத்மாறன்(25). இன்ஜினியரிங் பட்டதாரி. இவரின் நண்பர் அரவிந்த்(25). இருவரும் பைக்கில் கோவை சென்றனர். பைக்கை வினோத் மாறன் ஓட்டிச் சென்றார். இவர்களின் பைக் கரூர் மாவட்டம் திருச்சி பைபாஸ் சாலை வெள்ளாளப்பட்டி பிரிவுச் சாலை அருகே வந்த போது, திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற வினோத்மாறன் படுகாயமடைந்து இறந்தார். பின்னால் அமர்ந்து சென்ற அரவிந்த் காயமடைந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டூவீலர் விபத்தில் முதியவர் பலி: கடவூர் அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (62). இவர் தனது மொபட்டில் காணியாளம்பட்டியிலிருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பாலப்பட்டி பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த பைக் இவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: க.பரமத்தி ஒன்றியம் கோடந்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மோகன். இவரது மனைவி மகேஸ்வரி (53) நேற்று முன்தினம் இரவு மளிகை கடைக்கு 3 மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அதில் ஒரு நபர் மளிகை பொருள்கள் கேட்டுள்ளார். கடையில் இருந்த மகேஸ்வரி மளிகை பொருட்களை கொடுக்கும்போது அவர் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இது குறித்து மகேஸ்வரி தென்னிலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 3 மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Car collision ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...