×

சுற்றுலாப்பயணிகளைக் கவர மூணாறில் டிச.20ல் குளிர்கால திருவிழா

மூணாறு, நவ.5: மூணாறில் இடுக்கி மாவட்ட சுற்றுலா துறை சார்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குளிர்கால திருவிழா  டிச.20ம் தேதி  முதல் ஜன.1ம் தேதி வரை நடைபெற உள்ளது.கடந்த வருடம் மூணாறில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மூலம் மூணாறு சுற்றுலாத்துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது,. மேலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மூணாறில் குறைந்தது. இவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் வியாபாரிகள் பெரிதும் நஷ்டத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் நலிவடைந்த மூணாறை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் மூணாறில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவர குளிர்கால திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த மாவட்ட சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. டிச.20ம் தேதி துவங்கும் குளிர் கால திருவிழா ஜன.1ம் தேதி நிறைவடைகிறது.வண்ண மலர் கண்காட்சி மற்றும் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பலதரப்பட்ட விற்பனையனகங்கள் இந்த திருவிழாவில் இடம்பெறுகின்றன.மேலும் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பல வண்ண பூக்கள் இடம் பெறும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Winter Festival ,Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...