பேரையூர், நவ.5: சேடபட்டி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சேடபட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் ஏற்றி கொண்டு வந்த டிராக்டரை சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக டிராக்டரை பறிமுதல் செய்து, மள்ளப்புரத்தைச்சேர்ந்த மூர்த்தி (35), செல்லப்பாண்டி (28), ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.