×

சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 5: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து, மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக தமிழ்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் தலைமையில், மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அமைப்பினர் சார்பில், திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்தும், பாஜவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த செல்வம், பழங்குடியினர் இயக்க நிறுவனர் சிவநரேந்தர், புரட்சிப்புலிகள் தலைமை நிலைய செயலாளர் நெப்போலியன், வீரத்தமிழர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் இளந்தமிழன், மே.17 இயக்க நிர்வாகி மெய்யப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Demolition ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...