×

343 விநாயகர் சிலைகள் சென்னையில் கரைப்பு

சென்னை: சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் 343 விநாயகர் சிலைகள் அமைதியாக கரைக்கப்பட்டது. இதுகுறித்து, சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 343 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதே நாளில், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினரால் 217 சிலைகள் பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர்,  பட்டினப்பாக்கம் கடற்கரைகளிலும், போரூர், பள்ளிக்கரணை, தாம்பரம் மற்றும் நந்தம்பாக்கம்  ஏரிகள், குளங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. எஞ்சியுள்ள 126 சிலைகளில், கடந்த 11ம் தேதி 4 சிலைகளும், நேற்று 122 சிலைகளும் பகுதி வாரியாக கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் மிகவும் அமைதியாக நடைபெற சென்னை காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post 343 விநாயகர் சிலைகள் சென்னையில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Police ,Vineyagar ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்