×

சத்தியமங்கலம் உணவகத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது

சத்தியமங்கலம், நவ.5:    சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சத்தி கார்டன் ரெஸ்டாரன்ட் உணவகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு போலீசார் உணவகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 194 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உணவகம் நடத்தி வரும் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்த கர்ணன் (37), கோபியை சேர்ந்த அசோக்குமார் (36) இருவரிடம் விசாரித்தபோது உணவகத்தில் மது விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் கடைகளில் வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மது பாட்டில் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்கு பதிந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags : restaurant ,Sathyamangalam ,
× RELATED இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால்...