×

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

உடுமலை,நவ.5:ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. 1998-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவியாளர் பணி வழங்கிட வேண்டும். 2008-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தனிக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். 2008-க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங் மேன் பதவி உயர்வில் தேர்வுகள் இன்றி முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.உடுமலை கோட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களும் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Electricity contract workers ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து