×

வாலிபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

திருப்பூர்,நவ.5: திருப்பூரில் குடிபோதையில் ரோட்டில் நின்றிருந்த நபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் கணக்கம்பாளையம் விக்னேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சவுகத் அலி (21). இவர் நேற்று அந்த பகுதியில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சவுகத் அலியை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த வேறொரு நபர் சவுகத் அலியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சவுகத் அலி படுகாயமடைந்துள்ளார்.  இது குறித்து சவுகத் அலி கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி  வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது