×

ஆலாந்துறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தொண்டாமுத்தூர், நவ. 5:  ஆலாந்துறை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலாந்துறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயபானு தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலாந்துறை-சிறுவாணி சாலையில் உள்ள ஓட்டல், பேக்கரி, மளிகை கடை ஆகியவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செயல் அலுவலர் விஜயபானு மற்றும் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அளித்தனர். பின் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

Tags : Auckland ,
× RELATED 2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை கைப்பற்றியது