×

சூலூர் சிறுமி காணாமல் போய் ஒரு மாதமாகியும் விலகாத மர்மம்

சூலூர், நவ. 5:  சூலூர் அருகே குமாரபாளையம் கிராமத்தில் காணாமல் போன 5 வயது சிறுமி  குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள்  வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம்  பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(36). இவரது மனைவி கவிதா. இருவரும்   தனியார் தறி குடோனில்  பணிபுயாற்றி வருகின்றனர். தம்பதிக்கு வெற்றிவேல்(7)  என்ற மகனும் சாமினி(5) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த  அக்டோபர் மாதம் 5ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சாமினி  திடீரென மாயமானார். இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்  பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து   சிறுமியை தேடி வருகின்றனர்.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும்  சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் இதுவரை குழந்தை குறித்து எந்த தகவலும்  கிடைக்கவில்லை. சிறுமி காணாமல்போய் ஒரு மாதமாகியும் எந்த  துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் குமாரபாளையம்  கிராமம் பெரும் சோகத்தில் முழ்கியுள்ளது. கடந்த வாரம் சிறுமி  காணாமல் ேபான விவகாரத்தில் போலீசாரின்  விசாரணை மந்த கதியில் நடப்பதாக கூறிய  கிராம மக்கள் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக  தெரிவித்தனர். இதையறிந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.  எப்படியாவது சிறுமியைக் கண்டிபிடிக்க தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி  ஆவண செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : disappearance ,Sulur ,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி