×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் கூட்டம்

கீழ்வேளூர், நவ.5: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ்குப்தா கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இறந்த குருதாஸ்தாஸ் குப்தாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாவட்ட அலுவலகத்தில் நாகை எம்பி செல்வராஜ் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சம்பந்தம், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ராமன், ஒன்றிய செயலளார்கள் நாகை பாண்டியன், கீழையூர் செல்வம், திருமருகல் பாபுஜி, தலைஞாயிறு செல்லப்பன், நாகை நகர செயலாளர் கோபிநாதன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் மகேந்திரன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party of India ,meeting ,
× RELATED வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா