×

அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பி சீரமைப்பு

தரங்கம்பாடி, நவ.5: திருக்கடையூர் அருகே அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி சீரமைப்பு பணி மும்முரமாக நடக்கிறது. நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிமேடு செல்லும் சாலையில் தெற்கு தெரு, நடுத்தெரு பகுதியின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரிசெய்ய வந்த மின்வாரிய பொறியாளர்களிடம் முறையிட்டனர். அதை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன் மின்வாரிய பணியாளர்கள் அறுந்து விழுந்த உயர் மின்கம்பியை சரிசெய்து மீண்டும் மின்கம்பி அறுந்து விழாமல் இருக்க பாலிமர் இன்ஸ்லேட்டர் பீங்கான் மூலம் மின்கம்பியை சரிசெய்தனர்.
மேலும், மின்கம்பி அறுந்து விழுந்ததில் தரங்கம்பாடி தொகுதியில் உள்ள சீமோன் தெரு, வடக்கு மேட்டுத் தெரு, கன்னிதோப்பு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் தெரு விளக்குகள் உடைந்து நொறுங்கின.
தரங்கம்பாடி பேருராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் மற்றும் பேருராட்சி அலுவலர்கள் மின்கம்பிகளில் உடைந்த பல்புகளுக்கு பதில் புதிய பல்புகளை பொறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்