×

சீர்காழி அருகே சுனாமி தெருவில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது


சீர்காழி, நவ.5:சீர்காழியில் குழந்தையிடம் தங்க தாயத்து திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீர்காழி அருகே கீழ மூவர் கரை சுனாமி தெருவில் வசிப்பவர் கணேசன் மனைவி ரஞ்சிதா(23). இவர் தனது குழந்தையுடன் சீர்காழி வந்துவிட்டு மீண்டும் கீழ மூவர் கரைக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் ஏறினார். அப்போது சிதம்பரம் ஓமக்குளம் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (40) என்பவர் ரஞ்சிதா குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்து மற்றும் வெள்ளி காசு ஆகியவற்றை திருடியபோது ரஞ்சிதா கூச்சலிட்டார். சக பயணிகள் சாந்தியை பிடித்து சீர்காழி போலீஸ் நிலைத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தியை சிறையில் அடைத்தனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு ஒரு மருத்துவரால் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் உடல்நலம் பாதிப்பு அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் வெளியூர் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.மருத்துவமனைக்கு காலையில் நோயாளிகள் வரும்போது மருத்துவர்கள் அதிகளவில் இருந்து சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் மதியம், இரவு நேரங்களில் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் மட்டுமே இருந்து வருகிறார்.

Tags : baby ,Sirkazhi ,Tsunami Street ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...