×

மயிலாடுதுறை அருகே அரும்பூரில் கற்கள் பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை, நவ.5:  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் குளிச்சார் ஊராட்சிக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அரும்பூர் செல்லும் 1கிலோ மீட்டர் சாலை தற்போது கப்பிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு வாகனங்களை பயன்படுத்த விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தங்கள் கிராமத்தில் கொசுமருந்து அடிக்கவில்லை என்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை. நாகை மாவட்ட நிர்வாகம் உடனே இப்பகுதியை ஆய்வு செய்து சாலை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,gravel road ,Mayiladuthurai ,Arumbur ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...