×

திருத்துறைப்பூண்டியில் ரத்த வங்கி அமைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, நவ.5: திருத்துறைப்பூண்டியில் ரத்தவங்கி அமைக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டநிர்வாக குழு கூட்டம் மாவட்டதலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் முஹம்மது அசாருதீன், மாவட்ட துனைச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.திருத்துறைப்பூண்டியில் அரசு ரத்தவங்கிஅமைக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி நகராட்சி, மன்னார்குடி நகராட்சி ஆகியவைகளுக்கு உட்பட்டபகுதிகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது; இதனால் ஏராளமானவிபத்துகள்நிகழ்கின்றன.அந்தந்தபகுதிக்கு உட்பட்டநகராட்சி நிர்வாகம் உடனே இதனைகவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்.தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும், டெங்கு குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் மூலமாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். மாவட்டத்திற்கு உட்பட்டபகுதிகளில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருப்பின் அவைகள் குறித்து அரசு முறையாககவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் முஹம்மது சித்தீக் நன்றிகூறினார்.

Tags : Blood Bank ,
× RELATED ரத்ததான முகாம்