×

பெண்ணிடம் ரகளை 2 வாலிபர்கள் கைது


சென்னை, நவ.5: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (19). இவர், நேற்று தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, குடிபோதையில் 2 வாலிபர்கள் பவித்ராவிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பவித்ரா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தார். இந்நிலையில் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் அருகில் பதுங்கி இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்த கார்த்திக் (19), தினேஷ் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags : girls ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்