×

பூந்தமல்லியில் மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் பலி

பூந்தமல்லி, நவ. 5: பூந்தமல்லி திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (39). பூந்தமல்லி புதுத் தெருவில் சொந்தமாக டீ கடை நடத்தி வந்தார். இவர், நேற்று காலை டீ கடையில் சட்னி அரைப்பதற்காக மிக்ஸியை இயக்க மின்சார சுவிட்சை போட்டார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, கடையில் இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள். கருப்பசாமி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...