×

திருவாரூர், மன்னார்குடியில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

திருவாரூர், நவ.5: டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் போலீசாரால் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.அதன்படி திருவாரூரில் வழக்கறிஞர் சங்க செயலாளர் சுதாகர் தலைமையில் 13 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 83 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக மாவட்ட தலைமை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மகிளாநீதிமன்றம் , குடும்பநல நீதிமன்றம் ,தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ,உரிமையியல் நீதிமன்றம் என அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்குகளின் குறுக்கு விசாரணைகளுக்கு வழக்கறிஞர்கள் நேற்று ஆஜராகாததன் காரணமாக வழக்குகள் தள்ளி போடப்பட்டதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.இதேபோல் மன்னார்குடியில் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவண செல்வன் தலைமையில் 10 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 110 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags : Court ,lawyers ,Thiruvarur ,Mannargudi ,
× RELATED நீதிமன்ற கட்டிடத்திற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.14.59 கோடி நிதி