×

ரயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு

பொன்னேரி, நவ. 5: மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சைக்கிள் கடை நடத்துபவர் முகமது ஹசன் (60). ஓய்வு பெற்ற  ரயில்வே ஊழியர் நந்தியம்பாக்கம் எம்ஜிஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில்,வீட்டை பூட்டிக்கொண்டு சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உறவினர்  வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : railway employee ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...