×

பைக் விபத்தில் இளம்பெண் பலி


திருச்செந்தூர், நவ. 5: நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள திருவாலீஸ்வரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி செல்வரத்தினம் (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் சுப்பிரமணியன், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி விரதம் இருந்தார். கடந்த 2ம் தேதி செல்வரத்தினம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதமிருந்த வந்த கணவரை பார்ப்பதற்காக அவரது சித்தப்பா முத்துவேல் (44) என்பவருடன் பைக்கில் திருச்செந்தூருக்கு வந்தார்.குரும்பூர் அடுத்த குரங்கன்தட்டு அருகே செல்லும்போது வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பின்னால் உட்கார்ந்திருந்த செல்வரத்தினம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு செல்வரத்தினம் இறந்தார். இதுகுறித்து குரும்பூர் எஸ்ஐ சிலுவைஅந்தோணி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Teenager ,bike accident ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை