×

உத்திரமேரூர் அருகே வீட்டு மனைப்பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு

உத்திரமேரூர், நவ.5: வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளர் இன மக்கள், உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பெருமபாலானோருக்கு பட்டா இல்லாததால் நீர்நிலை பகுதிகளில் குடிசையில் வாழ்கின்றனர்.நீர்நிலைப் பகுதி என்பதால் குடிநீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் இலவச வீடுகள் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

 இதற்கிடையில், இருளர்கள் வசிக்கும் நீர்நிலை பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு கூறியுள்ளதால், அவர்கள் வசிக்க இடமின்றி தவிக்கின்றனர்.எனவே பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனையுடன் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என தனியார் அமைப்பு நிர்வாகி கலைச்செல்வி தலைமையில் உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் இருளர் இன மக்கள் மனு அளித்தனர்.அதில், விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து வீட்டுமனையுடன் கூடிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : Vattacharya ,Uthramerur ,house wife ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...