×

புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை, நவ. 5: புதுக்கோட்டை அருகே முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஐயப்பன் மகன் ஆனந்தராஜ் (18), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் ஆனந்தராஜின் தாயார் உறவினர் திருமணத்திற்கும், தந்தை ஆடு மேயச்சலுக்கும் சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஆனந்தராஜ், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...