×

எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு





சென்னை: எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 6, 13, 20, 27  ஆகிய தேதிகளில் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும் நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 15, 22ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை தாம்பரத்திற்கு 2.15 மணிக்கு வந்தடையும்.

அதேப்போல், நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில் 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Paddy ,Egmore ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...