×

இருதரப்பினர் மோதல் தம்பதி மீது தாக்குதல்

தூத்துக்குடி, நவ. 5: புதுக்கோட்டை அருகே கீழகூட்டுடன்காடு கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இன்பரசன் (30). இவரது வீட்டருகே கீழகூட்டுடன்காடு ஐயப்பன் நகரைச் சேர்ந்த அரசமுத்து மகன் அரசையா (27), தெற்குசிலுக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பரமசிவன் (38), புதுக்கோட்டை ஐயப்பநகரை சேர்ந்த செல்லையா (48) ஆகியோர் மது குடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இன்பரசன், அப்பகுதியில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதில் வாய் தகராறு ஏற்பட்டு மூவரும் சேர்ந்து அவரை தாக்கினர். இதில் காயமடைந்த இன்பரசன், புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருமலை வழக்கு பதிந்து அரசையா, பரமசிவனை கைது செய்தார்.
இதனிடையே செல்லையா வீட்டில் இருந்தபோது பைக்கில் வந்த 5 பேர் பக்கத்து வீட்டு கதவை தட்டினர். சத்தம் கேட்டு வெளியே வந்த செல்லையா, அவரது மனைவி பத்மாவதி (42) ஆகியோர் பக்கத்து வீட்டில் ஆளில்லை என்றனர். அப்போது ஆயுதங்களுடன் வந்த மேலும் சிலர், செல்லையா மற்றும் அவரது மனைவியை தாக்கி வீட்டையும் சேதப்படுத்தி விட்டு தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்லையா கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : clash ,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...